Wednesday, March 25, 2009

கபாலியாண்ட கேளு மாமே...,

* Karthikeyan G ...

* கபாலி்ணே, இந்தியா வல்லரசாகுமா?

முதல்ல இந்தியா நல்லரசு ஆகட்டும்,அப்புறம் வல்லரசு ஆகலாம்.,ஒருத்தன் 50 ரூபா கொடுத்துட்டு ஓட்டு கேட்குறான்னா அதுல அவனுக்கு எவ்ளோ லாபம்னு பாக்கனும்.இலவச சாமான் கொடுத்து ஓட்டு கேட்டா அந்த செலவெல்லாம் பலமடங்காக மீண்டும் நம்ம தலையிலேயே கட்டப்படும்னு நமக்குத் தெரியனும்.எவ்வளவு கோடி கொடுத்தும் தன் ஆட்சியை ஒருத்தன் ஏன் காப்பாத்திக்கொள்கிறான்?அதுலே அவனுக்கு அதைவிட பலமடங்காக கிடைக்கும் என்பதால். பசிக்கொடுமையால்(மட்டும்) 10ரூபாய் திருடியவனைப் படுக்கப்போட்டு மிதிக்கும் நம்ம காவல்துறை பைனான்ஸ் கம்பெனி நடத்தி பலகோடி அடிச்சவனுக்கு பந்தோபஸ்த் குடுக்குது.. இந்தியா நிச்சயமாக ஏழைநாடு அல்ல,அது சில முதலைகளின் வாயில் சிக்கி ஏழை நாடு போலத் தோற்றமளிக்கிறது.இந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கினாலே இந்தியா எங்கயோ போயிடும். நன்றி.தொடர்ந்து கேளுங்க. 

Nijam Khan...

* கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?

நீங்க "ஆப்பம் பங்கிட்ட குரங்கு" கதய கேள்விப்பட்டு இருக்கீங்களா? அந்த கததான் இப்ப திமுகவுல.ஓரளவுக்கு பிச்சி முடிஞ்சிச்சி திமுக‍‍‍‍‍‍‍******குறைந்த‌பட்சம் 20 அதிக பட்சம் 21 காங்*******குறைந்த‌பட்சம் 15 அதிக பட்சம் 16 வி.சி******குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 01(கரணம் போட்டாலும் 2 கிடைக்காது) மமக****** குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 02 மு.லீக்*****குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 01 (ஒன்றே பெருக என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம். 2 குடுத்தாலும் வாங்க மாட்டார்கள்)


*கரிமேடு கருவாயன் கூறியது...

* கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.

சரத்தின் வெற்றிவாய்ப்பு என்பது காளை மாட்டில் பால்கறக்க முயற்சி செய்வது போன்றது. ராதிகா போட்டியிட மறுத்தன் காரணம் அதுல (வேஸ்ட்டா) ஆகப்போற செலவ வேற ஒரு இளிச்சவாயன் தலையில கட்ட்லாமுன்னுதான். (உங்கள் கேள்விகளுக்கு நம்ம கடை கஷ்டமர் நம்பர் 1 குவாட்டர் கோயிந்தன் கூறியது... **கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்*** இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன். நாற்பதும் அவங்களுக்குதான். *** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.*** சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம். இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது. நான் சொன்னத விட கரீக்கிட்டு மாமே)

 Karthikeyan G...

Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?

கார்த்தி சார் படிக்கும் போது ஒழுங்கா படிக்கனும்.இப்டியா அரகொறயா படிக்கிறது.அந்த செய்தி என்னன்னா கலைஞ‌ர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்ட மாதிரி சிறப்பாக நடித்ததால் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு என்று தான் செய்தி வந்திருக்கிறது.எதையுமே பிளான் பண்ணாம பண்ணுனா இப்டித்தான். நம்ம கோயிந்தன் கொடுத்த பதிலையும் படிச்சிக்கிருங்க.அதுலயும் மேட்டரு இருக்கு ராசா.

* செந்தழல் ரவி ...

கபாலி மாமா,மோடி பிரதமரானா இந்தியா வல்லரசாவுமா ?

சாமி!இந்த மாதிரி அரசியல்வியாதிகள் இருக்கும் வரை யார் பிரதமரானாலும் இந்தியா இப்போதைக்கு வல்லரசாகாது.மோடியைப் பொருத்தவரை குஜாராத் கண்ட 25 வருட வளர்சிக்கும்,வெற்றிக்கும் தானே காரணம் என்பது போல விளம்பரப்படுத்தி வருகிறார். மற்றுமொரு குஜராத் போன்ற சம்வத்தால் வெளியரங்கில் மறுபடியும் இந்தியா தலைகவிழாமல் இருந்தாலே போதும்.இளைஞர்களை கணவுகானுங்கள்னு நம்ம அய்யா அப்துல் கலாம் சொன்னாரு.ஆனா நம்ம இளைஞன் தூங்கும் முன்பு இன்னிக்கி கணவுல நமீதா வருமா, நயந்தாரா வருமான்னு சிந்திச்சிக்கிட்டே தூங்கப்போறான்.வெளங்குமாய்யா!

*செந்தழல் ரவி ...

*கபாலி மாமா,நயந்தாராவை மிஸ் பண்ணிட்டேன் என்று சிம்பு அழுவானா அழுவமாட்டானா ?

இன்னா நெய்னா கேள்வி இது.கேள்வியே தப்பு. மிஸ்'ஸா இருந்த நயந்தாராவ மிஸஸ் ஆக்கிவிட்ட(புரியுதா கண்ணு! அதான்,அதேதான்) பெறுமை சிம்புவையே சேரும், மறுபடியும் ஏன் அவரை மிஸ் பண்ணிட்டோம்னு அழப்போறார்,.

*செந்தழல் ரவி ...

*கபாலி மாமா,நாடாளும் மக்கள் கட்சியோட தலைவர் யாரு ? மீதி பேரு என்னாத்தை ஆளுவாங்க

ராதிகா கஷ்டப்பட்டு கண்ணீர் வடிச்சி(சீரிய‌ல்லங்க) தண்ணீர் வத்திப்போய் சம்பாதிச்சிட்டு வர்ற காசை சுலோவோ சுவாகா பண்ணிடுறாரு சரத்து.மொதல்ல அவர் நல்ல கணவனா வீட ஆளட்டும்.பொறவு நாட ஆளலாம் என்பதே அரசியின் கருத்தாக இருக்கலாம்.குவாட்டர் 

*குவாட்டர் கோயிந்தன்  ...

*இன்னா அண்ணாத்தே நம்ம ரவி அண்ணாத்தேக்கு ஜவாபு கொடுக்கமே, சும்மா கீறே.

ஏன் மாமு இன்னிக்கி ஒன்னான்ட எதுவும் பதிலு இல்லியா.ஜாவாபு கொடுத்துகினேன் பாரு நைனா.

*Raja Shankar ...

*கபாலி அண்ணே நம்ம தமிழ்நாட்டுல இருந்து பல பேர் மத்திய அரசுல அமைச்சரா இருந்து கடந்த அஞ்சு வருசமா என்ன சாதிச்சாங்க அண்ணே

ஹலோ! என்ன கேள்விங்க இது.இதுக்கு மேலயும் அவங்க சம்பாதிச்சி IT(Income Tax) ரைடுல மாட்டனும்.அந்த நியூஸ பாத்து நீங்க ஆனந்தப் படனும்னு ஆசையா. என்ன இது சின்னப்புள்ளத் தனமா

Raja Shankar ..

*தலிவா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைல அப்படி என்ன தான் இந்த பய புள்ளக பேசுவாங்களோ தெரிலயே

ராஜா சார், நீங்க கல்யாண மண்டபத்துல பந்தி நடக்கும் பாத்திருக்கிறீங்களா! முதல் பந்தியில் வடை,பாசாயம்,அப்பளம்,கூட்டு பொரியல் என எல்லாம் கிடைக்கும்,இரண்டாவது பந்தியில வடையும் பாயாசமும் இருக்காது பிறகு பிறகு சாப்பிட்ட இலைகள் எடுக்கப்பட்டு வெளியே கொட்டப்பட்டும்.இலை கொட்டிய சவுண்டு கேட்டதும் அதுல இருக்கிற மிச்சமீதிக்கினே ஒரு கூட்டம் வரும். ஓகே! இப்ப உங்க கேள்விக்கு வருவோம். முதல் பந்திங்கிறது மெயின் கட்சி,இரண்டாவது பந்திங்கிறது கூட்டணி கட்சி கடைசியா வெளிய கொட்டப்படும் மூன்றாவது பந்தி நம்ம லட்டர் பேடுகள்.

இராகவன் நைஜிரியா ...

*மை டியர் கபாலி,

அரசியல் பத்திதான் கேள்வி கேட்கணுமா நைனா.. இல்ல வேற எத பத்தியாவது கேள்வி கேட்கலாமா?

எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சா டிரைபண்ணுறேன் வேறதப்பத்தியும் கேளுங்க மைடியர் அண்ணே!கஷ்டமா கேட்டுப்புடாதிய சாமி.இது வர என் வாழ்க்கையில நடந்த எல்லா எக்ஸாமுலயும் நான் பிட்டு அடிச்சித்தான் பாசாயிருக்கேன்.

*இந்த word verfification ஐ எடுத்துடு நைனா.. எடுத்துட்டு, எடுத்துட்டேன் அப்படின்னு ஒரு பதில் போடு மாமே?எடுக்கமாட்டேன் என்றால் ஏன் எடுக்க மாட்டேன் என்று ஒரு பதில் போடு மாமே?

நீங்க சொல்லி நான் மறுப்பேனா,எடுத்துட்டன்.ஆனா மொதல்ல கவணிக்கலண்ணே! நன்றி

? தமிழ் நாட்டில இப்ப வோட்டு ரேட்டு என்ன நைனா? வெளியில் தெரிஞ்சு எவ்வளவு? தெரியாம எவ்வள்வு?

இன்னும் அது கவுண்டிங்ல வரலண்ணே! ஆனா கட்சித்தலைவருங்க கிட்ட வேலை பாக்குற எடுபுடிகள் அங்க இவ்வோ குடுத்தேன்,இங்க இவ்வோ குடுத்தேன்னு அள்ளிவுட்டு தலீவருங்க கிட்ட பணங்கறக்குதுங்க‌

?தேர்தல் அப்படிகின்றதால, குவாட்டர் ரேட் எல்லாம் குறைஞ்சுடுச்சா நைனா? இல்ல ஏறிடிச்சா? சரக்கு கிடைப்பதில் கஷ்டம் இருக்கா நைனா?

விலை ஏத்தித்தான் விப்பானுங்க அண்ணே! இந்த நேரத்துல தான் உசாரா இருக்கனும்ணே. ஏன்னா கூட்டத்தோட கூட்டமா டூப்லிகேட் சரக்க நுழச்சிடுவாய்ங்கே.ஆனா தமிழக அரசு தரும் ஒரிஜினல விட டூப்லிகேட் எவ்வோ பராவாயில்ல.

அண்ணே! ஒரு ரிக்குயிஸ்ட்டு.உங்களுக்கு யார் மேலாயவது செம காண்டு இருந்தா அத உடனே நம்ம கோயிந்தன் மேல காட்டித் தீத்துக்குங்க.



உங்கள் கேள்விகளை கீழே கமெண்டில் எழுதவும்




20 comments:

ரவி said...

கபாலி மாமா

மோடி பிரதமரானா இந்தியா வல்லரசாவுமா ?

ரவி said...

கபாலி மாமா

நயந்தாராவை மிஸ் பண்ணிட்டேன் என்று சிம்பு அழுவானா அழுவமாட்டானா ?

ரவி said...

கபாலி மாமா

நாடாளும் மக்கள் கட்சியோட தலைவர் யாரு ? மீதி பேரு என்னாத்தை ஆளுவாங்க

குவாட்டர் கோயிந்தன் said...

இன்னா அண்ணாத்தே நம்ம ரவி அண்ணாத்தேக்கு ஜவாபு கொடுக்கமே, சும்மா கீறே.

டுமீல் ராஜா said...

கபாலி அண்ணே நம்ம தமிழ்நாட்டுல இருந்து பல பேர் மத்திய அரசுல அமைச்சரா இருந்து கடந்த அஞ்சு வருசமா என்ன சாதிச்சாங்க அண்ணே

டுமீல் ராஜா said...

தலிவா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைல அப்படி என்ன தான் இந்த பய புள்ளக பேசுவாங்களோ தெரிலயே

இராகவன் நைஜிரியா said...

மை டியர் கபாலி,

அரசியல் பத்திதான் கேள்வி கேட்கணுமா நைனா.. இல்ல வேற எத பத்தியாவது கேள்வி கேட்கலாமா?

இராகவன் நைஜிரியா said...

மை டியர் கபாலி

இந்த word verfification ஐ எடுத்துடு நைனா.. எடுத்துட்டு, எடுத்துட்டேன் அப்படின்னு ஒரு பதில் போடு மாமே?

எடுக்கமாட்டேன் என்றால் ஏன் எடுக்க மாட்டேன் என்று ஒரு பதில் போடு மாமே?

இராகவன் நைஜிரியா said...

தமிழ் நாட்டில இப்ப வோட்டு ரேட்டு என்ன நைனா? வெளியில் தெரிஞ்சு எவ்வளவு? தெரியாம எவ்வள்வு?

இராகவன் நைஜிரியா said...

தேர்தல் அப்படிகின்றதால, குவாட்டர் ரேட் எல்லாம் குறைஞ்சுடுச்சா நைனா? இல்ல ஏறிடிச்சா? சரக்கு கிடைப்பதில் கஷ்டம் இருக்கா நைனா?

குவாட்டர் கோயிந்தன் said...
This comment has been removed by the author.
குவாட்டர் கோயிந்தன் said...

***இன்னா அண்ணாத்தே நம்ம ரவி அண்ணாத்தேக்கு ஜவாபு கொடுக்கமே, சும்மா கீறே.
ஏன் மாமு இன்னிக்கி ஒன்னான்ட எதுவும் பதிலு இல்லியா.ஜாவாபு கொடுத்துகினேன் பாரு நைனா.***
அப்பாலிக்கா நீ எம்மேலே காண்டாகிற கூடாதில்லோ, அதான் அண்ணாதே... என்னோட ஜவாபை எதிர்பார்க்கிற உன்னோட அன்பை பார்த்து நான் மெர்சலாயிட்டேன். நண்ணி அண்ணாத்தே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

தலிவா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைல அப்படி என்ன தான் இந்த பய புள்ளக பேசுவாங்களோ தெரிலயே?
இது பேச போரவங்களுக்கே தெரியாது அண்ணாத்தே. ஆனா எல்லாரும் சொல்லுற ஒரு வாக்கியம் "நாப்பதுலயும் நாங்க கெலிப்பொம்"
ஆனா அங்கே உள்ளே போய் இருந்தேன்னு வைய்யி டாஸ்மாக்கிலே இருக்கிற பீலிங்கு இருக்கும்னு ஒரு அனுபவஸ்தர் காதிலே ஓதினாரு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

அரசியல் பத்திதான் கேள்வி கேட்கணுமா நைனா.. இல்ல வேற எத பத்தியாவது கேள்வி கேட்கலாமா?
எதுன்னாலும் கேளு அண்ணாத்தே.... ஆனா தயங்காமே கேளு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த word verfification ஐ எடுத்துடு நைனா.. எடுத்துட்டு, எடுத்துட்டேன் அப்படின்னு ஒரு பதில் போடு மாமே?
எடுக்கமாட்டேன் என்றால் ஏன் எடுக்க மாட்டேன் என்று ஒரு பதில் போடு மாமே?

இன்னா ... அண்ணாத்தே... என்னியவே சிந்திக்க வச்சிட்டியே.

ஆனா அண்ணாத்தே, இதுக்கு நான் ஜவாபு கொடுத்தேன்னு வைய்யி, அது அனுமாரு ( ராம தாசர், என்று பொருள் கொள்ள கூடாது, அனுமாரு என்றே புரிந்து கொள்ளவும், மீறி புர்ந்ஜிகினா, நிருவாகம் பொர்ப்பு இல்லே ) இந்த தோட்டத்திலே இருந்து அந்த தோட்டத்திற்கு போறதுக்கு ஒரு கரணம் / காரணம் போடுவாரு, அதுக்கு அப்பாலே அந்த தோட்டதில்ருந்து இந்த தோட்டத்திற்கு வருவதற்கு ஒரு கரணம் / காரணம் போடுவாரு அதை விட காமெடியா இருக்கும், அதை படிச்சி சிரிச்சி உனக்கு வவுறு வலி வந்திரும்.

ஒரே காரணம் தான், வெட்டியா போய் "வேட்டி"களை தேர்ந்துடுக்குற வெட்டி தேர்தல்லே ஓட்டு போடுறதுக்கே ஆலை வெரிபை பண்ணிகினு இருக்காங்க. இது அதை விட உசத்தி. அதான் அண்ணாத்தே. அப்பலிக்கா ஒன்னு சொல்றேன். உண்கு கஷ்டமா கீதா? சொல்லு பொது குழு கூட்டி ஒரு முடிவு சொல்றோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ் நாட்டில இப்ப வோட்டு ரேட்டு என்ன நைனா? வெளியில் தெரிஞ்சு எவ்வளவு? தெரியாம எவ்வள்வு?
ஊர்லே இருக்கிற அல்லா மக்களுக்கும் ஞானம் வார மேறி ஒரு கேள்வி கேட்டுகிறே சாரே.
ஓட்டு ரேட்டும் ரியல் எஸ்டேட்டு மேறி, இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறும் அண்ணாத்தே.

இதுலே தெரிஞ்சி, தெரியாமே எல்லாம் கிடையாது. வேணுமின்னா இப்படி வச்சிக்கலாம், எல்லாத்துக்கும் தெரிஞ்சே கொடுக்கிறாங்க. யாரும் தெரியாமே வாங்குறதில்லே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேர்தல் அப்படிகின்றதால, குவாட்டர் ரேட் எல்லாம் குறைஞ்சுடுச்சா நைனா? இல்ல ஏறிடிச்சா? சரக்கு கிடைப்பதில் கஷ்டம் இருக்கா நைனா?

தேர்தல் நேரத்திலே தான் அரசியல் வாதிங்க மக்களோட "தண்ணி" பிரச்சினைய தீர்க்க வருவாங்க என்று தெரியாத நீங்கள், இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை என்றே எண்ணுகிறேன்.

Karthikeyan G said...

கபாலினே, VVS லஷ்மண் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஆகா வாய்ப்பு உள்ளதா & சரத் பவார் பிரதமர் ஆகா வாய்ப்பு உள்ளதா?

இராகவன் நைஜிரியா said...

// உண்கு கஷ்டமா கீதா? சொல்லு பொது குழு கூட்டி ஒரு முடிவு சொல்றோம். //

நைனா இதில் என்னா குஷ்டம்.. ச்சே.. கஷ்டம்னா, தமிழில்ல அடிச்சுட்டு, திரும்பவும் இங்கிலிபீசுக்கு மாற கஷ்டமா கீது நைனா.. அப்புறம் அந்த எழுத்து எல்லாம் சரியா புரியல மாமே... அதனால எடுத்தா நல்லா இருக்கும் மாமே..

கஷ்டம்னா வேண்டாம் அப்படியே உட்டுடு நைனா.

இராகவன் நைஜிரியா said...

இந்த word verification - ஐ எடுத்துட்டீயே நைனா..

ரொம்ப டாங்ஸ்..

இராகவன் நைஜிரியா said...

// அண்ணே! ஒரு ரிக்குயிஸ்ட்டு.உங்களுக்கு யார் மேலாயவது செம காண்டு இருந்தா அத உடனே நம்ம கோயிந்தன் மேல காட்டித் தீத்துக்குங்க. //

எல்லா சரி நைனா. எம் பேர்லேயே எனக்கு காண்டு இருந்தா என்னா செய்யறது நைனா?

இராகவன் நைஜிரியா said...

மை டியர் கபாலி

பச்சோந்திகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஆறு ஒற்றுமை என்ன, வேற்றுமை என்னா?

இராகவன் நைஜிரியா said...

கபாலி, இப்ப எல்லோரும் தேர்தலை, தேர்தல் திருவிழா அப்படின்னு சொல்றாங்க இல்ல, திருவிழா அப்படின்னு சொல்ல காரணம் என்ன நைனா?

குவாட்டர் கோயிந்தன் said...

கபாலி அண்ணாத்தே.... உனக்கு ஏன், எம்மேலே.. இம்மா கொலெவெறி.

டுமீல் ராஜா said...

அண்ணாத்தே! பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் மன்மோகன் சிங்கா? அத்வானியா?